tamilkavithai, kathalkavithai, love, thathuvam, quotes, love poems, sad life kavithai, soga kavithai, whatsapp status kavithai, new tamil kavithai, kavithaikal
அம்மா கவிதை
kathal kavithaigal | காதல் கவிதைகள் Part-2
1.
அவளுக்காக இவனும்...
இவனுக்காக அவளும்...
உள்ளத்தை மாற்றிக்கொண்டு
நினைவுகளில் வாழ்கிறார்கள்
தொலை தூரத்தில்...!
2.
உன் தேடலா..?
எனக்கு நீ கிடைத்தது ...
இல்லை
என் தேடலா...?
உனக்கு நான் கிடைத்தது...
நீயும் நானும்
சேர்ந்தது தானோ நமக்கு
கிடைத்த இந்த வாழ்க்கை...!
3.
தொலை தூரப் பிரிவுகள்
சேர்த்துப் பார்க்கிறது
உன்னையும் என்னையும்
நினைவுகளில்...!
4.
நீயும் நானும் சேர்ந்து
உணவு சாப்பிட்ட
கடைகள் கூட நினைவு
படுத்துகிறது உனக்கு
போதுமா இல்லை வேறேதும்
வேண்டுமா என்று கேட்டதை...
என் மனதிற்கு மட்டுமே
தெரியும் எனக்கு தேவையானது...
5.
உன் நினைவை சுமக்கும்
நேரம் தான் நான் வாழும்
இந்த வாழ்க்கையோ..!
6.
பழைய காதலின்
தொடர்ச்சி தான்
நாம் செய்யும் புதிய
காதலின் தொடக்கம்...!
7.
வாழ்வில் சந்திக்கும்
ஒவ்வொருவரைப் பற்றியும்
எழுதி வைத்துக் கொண்டு,
யாரும் படித்து விடாமல்
மறைத்து வைக்கப்படுகிறது
உன் மனப்புத்தகம்...!
8.
நம்மை தொல்லையாக
நினைத்தவர்களை,
நாம் இல்லையென்றால்
அவர்களை தொல்லை
செய்வதற்கு கூட யாரும்
இல்லை என்று நினைக்க
வைத்து விடும் இந்த காலம்.
9.
அன்பிற்கு மதம் பிடித்து
வருவதே சந்தேகம்...!
10.
அவளின் அன்பிற்குள் தானே
அடங்கி கிடக்கிறான் ஆண்...!
11.
நேற்றைய
நினைவில்லாமல்
இன்றைய
நினைவில்லை...!
12.
நினைக்காத
நிமிடம் இல்லை,
நினைக்காமல்
வாழ்வே இல்லை..!
13.
வாழ்க்கைப் பயணத்தில்
அவரவர் நிறுத்தத்தில்
நம்மை விட்டு
இறங்கிக் செல்பவர்கள்
தான் அனைவரும். யாரும்
கடைசி வரை நம்முடன்
பயணிப்பதில்லை...!
14.
உள்ளம் கண்டு
வரும் ஆசை காதல்...!
உடல் கண்டு வரும்
ஆசை காமம்...!
15.
இங்கு உயிரோடு
இருக்கும் அனைவரும்
ஏற்கனவே செத்துப்
போனவர்கள் தான்...!
16.
காதலில் தோல்வி
கண்டவர்களுக்கு
ஒவ்வொரு இரவும் அவர்கள்
அழுவதற்காகவே வருகிறது..!
காதல் கவிதைகள் | kathal kavithaigal Part-1
1.
புரிந்துக் கொண்ட
உறவுகளிடத்தில்
பிரிவுகளுக்கு என்றும்
இடம் இல்லை...!
2.
என் இதயத்தில்
இருப்பவள்....!
என் நினைவுகளில்
வாழ்பவள்....! ஆனால்
நிஜத்தில் என்னுடன்
வாழாதவள்....! அவளும்
என் முன்னாள் காதலி....!
3.
காதலிக்காக கவிதை
எழுதவில்லை - நான்
காதலிப்பதால்
எழுதுகிறேன், என்
கவிதை எழுத்துக்களை...!
4.
என் உடல் எங்கு
சென்றாலும்
என் உள்ளம்
உன்னிடத்தில்
மட்டுமே உள்ளது....!
5.
கடவுளை நினைக்காமல்
உன்னையே நினைத்துக்
கொண்டிருப்பதால்
கடவுளுக்கு என் மீது கோபம்,
கோபித்தால் கோபித்துக்
கொள்ளட்டும்...... ஆனால்
கடவுளுக்கு தெரியாது நீ தான்
என் கடவுள் என்று...!
6.
நீ மட்டும் தான் என் உள்ளத்தில்
இருக்க வேண்டும் என்பதால்,
கடவுளை என் மனதை விட்டு
வெளியே அனுப்பி விட்டேன்.
கடவுளுக்கென்ன தூணிலும்
இருப்பார் துரும்பிலும்
இருப்பார்.... ஆனால் உன்னால்
என் மனதில் மட்டும் தானே
இருக்க முடியும்...!
7.
நாம் சென்ற இடமெல்லாம்
உன்னை நினைவூட்டுகிறது
நீ இல்லாமல் நான் அங்கு
செல்லும் போது...!
8.
எதைக்கொண்டு வந்தோம்
இல்லை என்று அழுவதற்கும்,
இழப்பதற்கும்...!
9.
எல்லோரும் கொடுத்ததைத் தான்
கேட்கிறார்கள்...!
அது போலவே இறைவனும்
கேட்கிறான் உயிரை...!
10.
இயற்கையை அனுபவிக்கத்
தானே தவிர எதையும்
சொந்தம் கொள்ள அல்ல....!
11.
இழந்தவர்களுக்கு
மட்டும்தான் புரியும்
இழப்பின் வலியும்
இழந்ததின் வேதனையும்...!
12.
பிரிந்த பிறகு தான்
அதிகமாக நினைக்க
வைக்கிறது இந்த மனது...!
13.
எல்லோரும் ஒரே மனதில்
தங்கி விட முடியாது...!
அதற்கான கொடுப்பினை
கடவுள் கொடுக்கவில்லை...!
14.
வெற்றிடத்தைக்
காற்று வந்து
நிரப்புவது போல
உன் மனதில் உள்ள
வெற்றிடத்தை
என் காதல் வந்து
நிரப்பட்டுமே...!
15.
இன்று மலர்ந்த மலரைப் போல
என்றோ மலர்ந்த ஒரு மலர்
வாடாமல் உள்ளத்தில் வாடி
கருகுகிறது பெண் என்ற உருவில்...!
16.
நேற்று பூத்த அழகான
மலர் தான் இன்று
அசிங்கமாக வாடி விட்டது,
அழகும் அசிங்கமும்
வேறில்லை, இங்கு எல்லாம்
இயற்கையின் மரு உருவமே...
ஏனெனில் ஒன்றில் தான்
மற்றொன்று மறைந்துள்ளது...!
17.
இழந்தவைகளின் நினைவுகள்
மெல்ல மெல்ல நம்மை இழக்க
வைத்து விடுகிறது....!
18.
எவ்வளவோ வசதிகள்
இருந்தும் நேரிலும்
கைப்பேசியிலும்
பேசிக் கொள்ள
முடியாமல் போகும்
பொழுதுகளில்....
நான் மனதோடு பேசிக்
கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு...!
19.
பிடித்தவர்களிடம்
பேசுவதற்கு எவ்வளவோ
வழிகள் இருந்தும் வேறு
வழியில்லாமல் நாம்
பேசாமல் போகிறோம்...!
20.
உன்னை பற்றி நினைக்க
உனக்கு நேரம்
இருக்குமோ இல்லையோ
என்று தெரியவில்லை....
அதனால் தான்
உனக்கும் சேர்த்து
உன்னை நினைத்துக்
கொள்கிறேன் நான்....!
21.
ஏதோ ஒன்றுக்காகத் தான்
காத்திருக்கிறோம் - தினம்
ஏதோ ஒன்றுக்காகத் தான்
ஓடிக்கொண்டிருக்கிறோம்.
22.
எனக்குப் பிறகு
உன் நினைவுகளை
சுமந்துக் கொண்டு
உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதற்காகவே
நான் விட்டுச் செல்லும்
நினைவுகள் தான்
என் கவிதைகள்....!
23.
உன் நினைவுகளுக்குள்
நான் ஆயுள்
கைதியாகவே
தினமும் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்...!
24.
நீ சாய்வதற்காகவே
வைத்திருக்கும் என்
தோள்களில் யார்
யாரோ தூங்கி சாய்ந்துக்
கொள்கிறார்கள்
பேருந்து பயணத்தில்...!
25.
எல்லோரையும் பார்க்க
ஒரு பார்வை என்றும்
என்னைப் பார்க்க
ஒரு பார்வை என்றும்
வைத்திருக்கிறாய்....!
26.
என்னைக் கண்டதும்
யாருக்கும் தெரியாமல்
நீ வெட்கப்படுவதை
நினைத்துப் பார்க்கும்
பொழுதெல்லாம்
யாருக்கும் தெரியாமல்
நான் வெட்கப்பட்டுக்
கொள்கிறேன்
கண்ணாடி முன் நின்று...!
27.
உன்னை எப்பொதும்
நினைத்துக் கொண்டே
இருக்கிறேன் என்று
நினைக்காதே....
உன்னை நினைப்பதால்
தான் நான் இருக்கிறேன்...!
28.
கவலை
மகிழ்ச்சியைத்
தொடர்வதைப்
போல...
என் கவலைக்கு
உன் நினைவுகளே
மகிழ்ச்சியாகத்
தொடர்கிறது....!
29.
சொல்லிய நேரத்திற்கு
வராமல் நொடிக்கு நொடி
தாமதமாகும் நேரத்தில்
உள்ளத்தில் வெடிக்கும்
எரிமலையை... உன்
பாச மழையைக் கொட்டி
அணைத்து விடு... என்
மனம் குளிர்ந்து விடும்...!
30.
உன் நினைவுகளோடு
நான் நடை பயிற்சி
செல்லும் போது அது
நடை பயணமாகவே
நீண்டு விடுகிறது....!
31.
நீ அப்பா செல்லமா
இல்லை நீ அம்மா
செல்லமா என்று
தெரியவில்லை.....
ஆனால் நான் என்றும்
எப்போதுமே
உன் ஞாபகத்தின்
செல்லம் மட்டும் தான்...!
32.
யாரையும் விருப்பு
வெறுப்பு இல்லாமல்
நேசித்தால் உனக்கு
எப்போதும் துன்பம்
இல்லை அவர்களால்.
33.
இல்லத்திற்கு சொந்தக்காரன்
அதன் உள்ளே இருப்பதை
அறிவான், அது போல
அவள் உள்ளத்திற்கு
சொந்தக்காரன் நான்
அறிவேன் அவள்
மனதில் உள்ளதை...!
34.
உன்னை விட்டு நான்
பிரிந்து இருந்தாலும்
நான் உயிரோடு தான்
இருக்கிறேன் உன்
நினைவுகள் என்னை
விட்டு பிரிந்து
செல்லாததால்....!
35.
ஓயாமல்
உன்னையே
நினைக்கிறேன்
என் ஓய்விலும்
உன்னையே
நினைக்கிறேன்...!
36.
காத்திருப்பதும்
சுகம் தான்
நினைவெல்லாம்
நீயாக இருப்பதால்...!
37.
உன்னோடு வாழ நான்
என்ன கொடுப்பினை
செய்திருக்க வேண்டும்
என்று தெரியவில்லை....
ஆனால் நான் என்ன
கொடுப்பினை செய்தேனோ
தெரியவில்லை உன்
நினைவுகளோடு நான்
தினம் வாழ்ந்துக்
கொண்டிருக்கிறேன்....!
38.
நிலா இல்லாத
நாட்களில்
வானத்தை
நட்சத்திரங்கள்
அழகாக்குகின்றன...!
நீ இல்லாத
நாட்களில்
உன் நினைவுகள்
அழகாக்குகின்றன
என் வாழ்க்கையை...!