Skip to main content

எனது வெளிநாட்டு வாழ்க்கை...!

குடும்பத்திற்காக நமது கஷ்டங்கள் தீருவதற்காக நமது எல்லோருடைய மகிழ்ச்சிக்காக எதை  இழப்பதற்கும் துணிந்து... கனவுகளை அல்ல, என் நாட்களையே விற்றுக் கொண்டிருக்கிறேன் இந்த வெளிநாட்டு மண்ணில்… விடியல்கள் இங்கே  தொடங்கினாலும், என் மனம் இன்னும் வீட்டு வாசலில் தான் நின்று கொண்டிருக்கிறது. அம்மாவின் குரல் போனில் கேட்கும் போதெல்லாம், சம்பளத்தை விட அந்த வார்த்தைகளே என்னை உயிரோடு வைத்திருக்கின்றன. அம்மா “சாப்பிட்டாயா?” என்று கேட்கும் போது, நான் “ஆமா” என்று சொல்லிவிட்டு, என் தனிமையை விழுங்கிக் கொள்கிறேன்… “எப்போ வருவாய்?” என்ற கேள்வி — எல்லாம் சேர்ந்து இந்த பிரிவு எனக்கு அன்பாகவே வலிக்கச் செய்கிறது. நாட்களை எண்ணிக் கொண்டே நான் வேலை செய்கிறேன், நாட்களை எண்ணிக் கொண்டே நீங்கள் காத்திருக்கிறீர்கள்…! ஒரே ஒரு வித்தியாசம் தான், நான் இங்கு பணம் சேமிக்கிறேன், நீங்கள் அங்கு என் நினைவை சேமித்து வைத்திருக்கிறீர்கள். ஒருநாள், இந்த வெளிநாட்டு மண் என்னை விடுவிக்கும், அன்று என் கால்கள் அல்ல, என் மனம் தான் உங்களை காண முதலில் வீட்டுக்கு ஓடி வரும்…! என் கையில் பணம் இருக்கும்… ஆனால் என் உள்ளத்தில் திரும்பப் பெற ம...

Contact Us

 Contact Us

Thank you for visiting poemsda.com.

If you have any questions, suggestions, feedback, or concerns regarding the content published on this website, feel free to contact us. We always value our readers’ thoughts and opinions.

You can reach us through the following:

Email: rajavelbusiness@gmail.com

We aim to respond to all genuine queries as soon as possible.

Your feedback helps us improve and deliver better content for our readers.

Thank you for supporting poemsda.com.

Comments

Popular posts from this blog

வாழ்க்கை அறிவுரைகள் | life philoshopy quotes

தேவை இல்லாததை  வாங்கக் கூடாது, அவசியம்  இல்லாததைப் பேசக் கூடாது, அழையாத வீட்டிற்கு போகக் கூடாது. எளியோரை வலியோர் அடித்தால், அந்த  வலியோரை தெய்வம் ஒரு நாள் அடிக்கும்....! மீண்டு எழுந்து வர  முடியாத அளவிற்கு...! எப்போதும் உன்னுடைய  பலம், அறிவை மட்டும் நம்பி ஒரு செயலை செய், பிறரை நம்பி எதையும் செய்யாதே....! தீயவர்களுடன்  இருப்பதை விட தனிமையில்  இருப்பது நல்லது, தீமை தரும் சொற்களை  பேசுவதை விட மெளனம் சிறந்தது. மனிதனின் ஆசைகள்  ஒரு போதும் முழுமையாக  நிறைவேறாதது, மேலும் மேலும் பெற வேண்டும் என்று திரிந்து கொண்டு தான் இருக்கும்...! பிறருக்கு நல்லது  விளைவிக்கும் செயல்களை செய், தீமை விளைவிக்கும் செயல்களை கனவிலும் நினைத்துப் பார்க்காதே...! தன்னையே பெருமையாக நினைப்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான்...! சுயநல மனிதர்களுக்கு சொந்த பந்தமே இருக்க மாட்டார்கள்...! கோபத்தோடு சென்றால் நஷ்டத்தொடு தான் வர வேண்டும். கோபத்தினால் போனது சிரித்தால் மட்டும் வராது...! இளமையில்  துணிச்சல் வேண்டும், முதுமையில் நிதானம் வேண்டும். வாழ்வதில் தான் இன்பம், உழைப்பதி...

வாழ்க்கை தத்துவங்கள் | philoshopy quotes

இளமையில் வரும் வறுமையும், முதுமையில் வரும் செல்வமும் துன்பத்தை தரும்...! பண ஆசையும், பெண் ஆசையும், மண்ணாசையும் ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துகிறது, அவனுடைய  சுதந்திரத்தைப்  பறித்து விடுகிறது...! பணத்தை இழந்தால் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளலாம், ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் மீண்டும் பெற முடியாது. சந்தோசம் வெளியில் இல்லை, நாம் இருக்கும் இடத்திலே தான் உள்ளது. உள்ளத் திருப்தி, சின்னச் சின்ன உதவி செய்தல்,  பிறரிடம் அன்பாக  நடந்து கொள்ளுதல்,  மிதமான பேச்சு, பிறருக்குத் தொல்லை இல்லாமல் இருத்தல், கடன் வாங்காமை, இவை தான் சந்தோசமாகும்....! கஷ்டப்பட்டு  சம்பாதித்த பணம் தேவை இல்லாததிற்கு செலவு செய்யக்கூடாது... சேமிப்பு மிக முக்கியம். சிக்கனமும் ஒரு வருமானம் தான். ஆடம்பரச் செலவு அழிவைத் தரும்....! அதிகமான  துக்கமும் பேசாது, அதிகமான  சந்தோசமும் பேசாது.  குறைந்த துக்கம்  உள்ளவன் புலம்பிக்  கொண்டே இருப்பான்...! In நல்ல அறிவாளிகள் துக்கத்தையோ சந்தோசத்தையோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இரண்டுமே அவர்களுக்கு ஒன்று தான்...! நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால்...