Skip to main content

வாழ்க்கை அறிவுரைகள் | life philoshopy quotes


தேவை இல்லாததை 

வாங்கக் கூடாது,

அவசியம் 

இல்லாததைப்

பேசக் கூடாது,

அழையாத வீட்டிற்கு

போகக் கூடாது.


எளியோரை வலியோர்

அடித்தால், அந்த 

வலியோரை தெய்வம்

ஒரு நாள் அடிக்கும்....!

மீண்டு எழுந்து வர 

முடியாத அளவிற்கு...!


எப்போதும்

உன்னுடைய 

பலம், அறிவை

மட்டும் நம்பி

ஒரு செயலை

செய், பிறரை

நம்பி எதையும்

செய்யாதே....!


தீயவர்களுடன் 

இருப்பதை விட

தனிமையில் 

இருப்பது நல்லது,

தீமை தரும்

சொற்களை 

பேசுவதை விட

மெளனம் சிறந்தது.


மனிதனின்

ஆசைகள் 

ஒரு போதும்

முழுமையாக 

நிறைவேறாதது,

மேலும் மேலும்

பெற வேண்டும்

என்று திரிந்து

கொண்டு தான்

இருக்கும்...!


பிறருக்கு நல்லது 

விளைவிக்கும்

செயல்களை செய்,

தீமை விளைவிக்கும்

செயல்களை கனவிலும்

நினைத்துப் பார்க்காதே...!


தன்னையே

பெருமையாக

நினைப்பவன்

தன்னையே

ஏமாற்றிக்

கொள்கிறான்...!


சுயநல

மனிதர்களுக்கு

சொந்த பந்தமே

இருக்க மாட்டார்கள்...!


கோபத்தோடு

சென்றால்

நஷ்டத்தொடு தான்

வர வேண்டும்.

கோபத்தினால்

போனது சிரித்தால்

மட்டும் வராது...!


இளமையில் 

துணிச்சல் வேண்டும்,

முதுமையில்

நிதானம் வேண்டும்.

வாழ்வதில் தான்

இன்பம்,

உழைப்பதில் தான்

வாழ்வு...!


ஆசைகள்

குறைந்தால்

அமைதி பெருகும்,

ஆணவம் 

முன்னாள் போனால்

அவமானம் 

பின்னால் வரும்...!


உன் துன்பத்தை

யாரிடமும்

சொல்லி ஆறுதல்

தேடாதே...!

அவர்கள் தரும்

ஆறுதலை விட

அவர்கள் அடையும்

ஆனந்தமே அதிகம்.


உழைப்பு

உயர்வு தரும்,

நல்ல எண்ணம்

நன்மையைத் தரும்,

ஒழுக்கம் 

பெருமையை தரும்.


தவறு

செய்யும் முன்

மனசாட்சியே

உங்களை ஒரு முறை

எச்சரிக்கை செய்யும்,

அதை மீறி செய்த 

பிறகு மனசாட்சியே 

நீதிபதியாக இருந்து

உங்களை தண்டிக்கும்...!


பணத்தை விட

அறிவே 

உயர்ந்தது...!

அறிவை விட

ஒழுக்கமே

சிறந்தது...!


கடன் 

கொடுத்து

கேட்பதற்கு

பதிலாக

தானமே 

கொடுத்து

விடலாம்...!



குறைவாகப் 

பேசு...

இனிமையாகப் 

பேசு...

உண்மையே 

பேசு...



சந்தர்ப்பம் 

வரும்போது 

அதனை 

பயன்படுத்திக் 

கொள்ள தயாராக 

இருப்பதே 

வெற்றிக்கு

அடிப்படை...!


பையில் இருக்கும்

பணம்,

பக்கத்தில் இருக்கும்

மனைவி,

வளர்க்கும் நாய்

இவற்றை மட்டும்

நம்ப வேண்டும்...!


கடன் 

இல்லாதவனே

பணக்காரன்,

உடல்

ஆரோக்கியம்

உள்ளவனே

செல்வந்தன்...!


தன்னுடைய 

வருமானம்,

வியாதி,

கடன்

இவற்றை

யாரிடமும்

சொல்லக்கூடாது...!


மனிதனுக்கு

தேவை

அன்புள்ள

இதயமும்

அமைதியான

மனமும்...!


மன நிறைவு 

என்பது

இயற்கையாகவே 

நம்மிடம்

உள்ள செல்வம்.

ஆடம்பரம்

என்பது நாமே

தேடிக்கொள்ளும்

வறுமை.

எளிமையே 

வாழ்க்கைக்குத் 

துணை புரியும்.


நண்பனை அவன் 

இல்லாதபோது மனம் 

நிறைந்து புகழ வேண்டும்.

ஆசிரியரை 

எல்லா இடங்களிலும் 

புகழ வேண்டும்.

பிள்ளைகளை மனதில்

வைத்து புகழ வேண்டும்.

மனைவியைக் கூடி வாழும் 

நேரத்தில் புகழ வேண்டும்.

தொழிலாளியை வேலை

முடித்த பின்னர் புகழ வேண்டும்.



ஒரு மனிதனுக்கு

உண்மை தான் தாய்,

அறிவு தான் தகப்பன்,

தர்மம் தான்

கூடப் பிறந்தவன்,

தயவு தான் நண்பன்,

அடக்கம் தான் மனைவி,

பொறுமை தான் மகன்,

இவர்களே உறவினர்கள்.


வாழ்க்கைக்கு மிகத்

தேவையானது 

பணம்தான்.

அதை நல்ல வழியில்

உழைத்து சம்பாதிக்க 

வேண்டும். பிறரை

ஏமாற்றிப் பெறும்

பணம் நிலைக்காது...!


மன அமைதி,

ஆனந்தம் இவை

பணத்தால் 

கிடைக்காது...!

அன்பு, கடவுள் அருள்,

தியாகம் போன்றவை

இருந்தால் தான் 

கிடைக்கும்....!


Comments

Popular posts from this blog

வாழ்க்கை தத்துவங்கள் | philoshopy quotes

இளமையில் வரும் வறுமையும், முதுமையில் வரும் செல்வமும் துன்பத்தை தரும்...! பண ஆசையும், பெண் ஆசையும், மண்ணாசையும் ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துகிறது, அவனுடைய  சுதந்திரத்தைப்  பறித்து விடுகிறது...! பணத்தை இழந்தால் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளலாம், ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் மீண்டும் பெற முடியாது. சந்தோசம் வெளியில் இல்லை, நாம் இருக்கும் இடத்திலே தான் உள்ளது. உள்ளத் திருப்தி, சின்னச் சின்ன உதவி செய்தல்,  பிறரிடம் அன்பாக  நடந்து கொள்ளுதல்,  மிதமான பேச்சு, பிறருக்குத் தொல்லை இல்லாமல் இருத்தல், கடன் வாங்காமை, இவை தான் சந்தோசமாகும்....! கஷ்டப்பட்டு  சம்பாதித்த பணம் தேவை இல்லாததிற்கு செலவு செய்யக்கூடாது... சேமிப்பு மிக முக்கியம். சிக்கனமும் ஒரு வருமானம் தான். ஆடம்பரச் செலவு அழிவைத் தரும்....! அதிகமான  துக்கமும் பேசாது, அதிகமான  சந்தோசமும் பேசாது.  குறைந்த துக்கம்  உள்ளவன் புலம்பிக்  கொண்டே இருப்பான்...! In நல்ல அறிவாளிகள் துக்கத்தையோ சந்தோசத்தையோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இரண்டுமே அவர்களுக்கு ஒன்று தான்...! நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால்...