Skip to main content

பண ஆசையும், பெண் அசையும், மண்ணாசையும் — மனிதனின் சுதந்திரம் எங்கே?

 பண ஆசையும், பெண் அசையும், மண்ணாசையும் — மனிதனின் சுதந்திரம் எங்கே? “பண ஆசையும், பெண் அசையும், மண்ணாசையும் ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துகிறது; அவனுடைய சுதந்திரத்தைப் பறித்து விடுகிறது.” இந்த சில வரிகள் சாதாரண கவிதை அல்ல. இது மனித வாழ்க்கையின் ஆழமான உண்மையை நம்மிடம் சொல்லும் ஒரு கண்ணாடி. மனிதன் பிறக்கும் போது அவன் முழுமையான சுதந்திரத்துடன் பிறக்கிறான். அவனுக்கு எல்லாம் புதிது — ஆசைகள் இல்லை, போட்டி இல்லை, ஒப்பீடு இல்லை. ஆனால் காலம் செல்ல செல்ல, அவன் மனதில் மூன்று சக்திவாய்ந்த ஆசைகள் உருவாகின்றன: பணம், உறவு (அன்பு/காதல்), சொத்து. இந்த மூன்றும் வாழ்க்கையை அமைக்க உதவுகின்றன. ஆனால் அதே நேரத்தில், அளவை மீறினால் அவை மனிதனின் சுதந்திரத்தையே கட்டிப்போடும் சங்கிலிகளாக மாறுகின்றன. இந்த கட்டுரையில், இந்த மூன்று ஆசைகள் எப்படி மனிதனை வழிநடத்துகின்றன, எப்போது அவை அவனை அடிமைப்படுத்துகின்றன, மற்றும் உண்மையான சுதந்திரம் எங்கே இருக்கிறது என்பதை ஆழமாகப் பார்க்கலாம். --- மனிதன் மற்றும் ஆசை – இயல்பான உறவு ஆசை என்பது தவறு அல்ல. உண்மையில், ஆசை இல்லாமல் முன்னேற்றமே இல்லை. ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் பெற ஆசைப்ப...

எனது வெளிநாட்டு வாழ்க்கை...!

குடும்பத்திற்காக

நமது கஷ்டங்கள் தீருவதற்காக

நமது எல்லோருடைய

மகிழ்ச்சிக்காக எதை 

இழப்பதற்கும் துணிந்து...

கனவுகளை அல்ல,

என் நாட்களையே

விற்றுக் கொண்டிருக்கிறேன்

இந்த வெளிநாட்டு மண்ணில்…



விடியல்கள் இங்கே 

தொடங்கினாலும்,

என் மனம் இன்னும்

வீட்டு வாசலில் தான்

நின்று கொண்டிருக்கிறது.

அம்மாவின் குரல்

போனில் கேட்கும் போதெல்லாம்,

சம்பளத்தை விட

அந்த வார்த்தைகளே

என்னை உயிரோடு வைத்திருக்கின்றன.



அம்மா “சாப்பிட்டாயா?”

என்று கேட்கும் போது,

நான் “ஆமா”

என்று சொல்லிவிட்டு,

என் தனிமையை

விழுங்கிக் கொள்கிறேன்…



“எப்போ வருவாய்?”

என்ற கேள்வி —

எல்லாம் சேர்ந்து

இந்த பிரிவு எனக்கு

அன்பாகவே வலிக்கச் செய்கிறது.



நாட்களை எண்ணிக் கொண்டே

நான் வேலை செய்கிறேன்,

நாட்களை எண்ணிக் கொண்டே

நீங்கள் காத்திருக்கிறீர்கள்…!



ஒரே ஒரு வித்தியாசம் தான்,

நான் இங்கு பணம் சேமிக்கிறேன்,

நீங்கள் அங்கு என் நினைவை

சேமித்து வைத்திருக்கிறீர்கள்.



ஒருநாள், இந்த வெளிநாட்டு மண்

என்னை விடுவிக்கும்,

அன்று என் கால்கள் அல்ல,

என் மனம் தான் உங்களை

காண முதலில் வீட்டுக்கு ஓடி வரும்…!


என் கையில் பணம் இருக்கும்…

ஆனால் என் உள்ளத்தில்

திரும்பப் பெற முடியாத

ஒரு காலம்

இல்லாமல் போயிருக்கும்…!


இவண் 

👑 ராஜா

Comments

Popular posts from this blog

தேய்ந்து கொண்டிருக்கும் இளமை...!

தேய்ந்து கொண்டிருக்கும் இளமை கவிதை: எதிர்காலத்தைத் தேடி தேடியே தேய்ந்து விடுகிறது இன்றைய இளமை…! முன்னுரை இன்றைய இளமை, கனவுகளாலும் எதிர்பார்ப்புகளாலும் நிரம்பிய காலமாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அந்த இளமை மெதுவாக தேய்ந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்ற பெயரில் ஓடும் ஓட்டத்தில், இன்றைய மகிழ்ச்சியும் நிம்மதியும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கவிதை, அந்த மறைக்கப்பட்ட வலியை மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. இன்றைய இளைஞர்களின் நிலை ஒருகாலத்தில் இளமை என்றால் உற்சாகம், கனவுகள், தைரியம், விளையாட்டு என்று நினைத்து கொண்டிருந்தோம். இன்று அதே இளமை, போட்டி, அழுத்தம், பயம், குழப்பம் என்ற வார்த்தைகளோடு இணைந்து நிற்கிறது. வேலை, பணம், சமூக மதிப்பு, குடும்ப பொறுப்பு – இவை அனைத்தையும் சுமந்தபடி, இளமையும் தனக்கான நேரத்தையும் இழந்து விடுகிறோம். பல இளைஞர்கள் தங்கள் ஆசைகளை தள்ளி வைத்து, மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் சிரிப்பு குறைந்து, சிந்தனை கனமாகி, மனம் மெதுவாக சோர்ந்து விடுகிறது. எதிர்காலம் vs இன்றைய நிம்மதி எதிர்காலம் முக்கியம் தான்....

வாழ்க்கை தத்துவங்கள் | philoshopy quotes

இளமையில் வரும் வறுமையும், முதுமையில் வரும் செல்வமும் துன்பத்தை தரும்...! பண ஆசையும், பெண் ஆசையும், மண்ணாசையும் ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துகிறது, அவனுடைய  சுதந்திரத்தைப்  பறித்து விடுகிறது...! பணத்தை இழந்தால் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளலாம், ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் மீண்டும் பெற முடியாது. சந்தோசம் வெளியில் இல்லை, நாம் இருக்கும் இடத்திலே தான் உள்ளது. உள்ளத் திருப்தி, சின்னச் சின்ன உதவி செய்தல்,  பிறரிடம் அன்பாக  நடந்து கொள்ளுதல்,  மிதமான பேச்சு, பிறருக்குத் தொல்லை இல்லாமல் இருத்தல், கடன் வாங்காமை, இவை தான் சந்தோசமாகும்....! கஷ்டப்பட்டு  சம்பாதித்த பணம் தேவை இல்லாததிற்கு செலவு செய்யக்கூடாது... சேமிப்பு மிக முக்கியம். சிக்கனமும் ஒரு வருமானம் தான். ஆடம்பரச் செலவு அழிவைத் தரும்....! அதிகமான  துக்கமும் பேசாது, அதிகமான  சந்தோசமும் பேசாது.  குறைந்த துக்கம்  உள்ளவன் புலம்பிக்  கொண்டே இருப்பான்...! In நல்ல அறிவாளிகள் துக்கத்தையோ சந்தோசத்தையோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இரண்டுமே அவர்களுக்கு ஒன்று தான்...! நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால்...

நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்...!

நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் முன்னுரை மனித வாழ்க்கை என்பது ஒரு நிரந்தர பாதை அல்ல. இன்று நம்மிடம் இருப்பது நாளை இல்லாமல் போகலாம். இன்று சிரிப்பை தருவது, நாளை கண்ணீராக மாறலாம். இதை புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையை நிரந்தரம் போல நம்பி வாழும் போது தான் அதிகமான வலியும் ஏமாற்றமும் உருவாகிறது. நிலையற்ற வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என்பது நம்பிக்கையின்மை அல்ல; அது வாழ்க்கையை உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளும் ஒரு உயர்ந்த விழிப்புணர்வு. வாழ்க்கை ஏன் நிலையற்றது? வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. காலம் மாறுகிறது, சூழ்நிலைகள் மாறுகின்றன, மனிதர்களும் மாறுகிறார்கள். இன்று நம்முடன் இருப்பவர்கள் நாளை தூரமாகலாம். இன்று நம்மை மதிப்பவர்கள் நாளை மறக்கலாம். இளமை முதிர்ச்சியாக மாறுகிறது ஆரோக்கியம் நோயாக மாறுகிறது செல்வம் வறுமையாக மாறுகிறது உறவுகள் தூரமாக மாறுகின்றன இந்த மாற்றங்களே வாழ்க்கையின் இயல்பு. நிலையற்ற வாழ்க்கையின் மீது அதிக நம்பிக்கை வைத்தால் என்ன நடக்கும்? 1. ஏமாற்றம் அதிகரிக்கும் நிரந்தரம் என நினைத்து நம்பியவை மாறும் போது, மனம் உடைந்து விடுகிறது. 2. மனிதர்கள் மீது...